‘வைத்தியர்களை தக்க வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளது’

0
47

இலங்கையின் சுகாதாரத் துறை கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும், சமீபத்திய பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக 2,500க்கும் மேற்பட்ட நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாகவும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரித்துள்ளது.

மருத்துவ நிபுணர்களின் வெளியேற்றத்தில் குறிப்பிடத்தக்க சரிவு எதுவும் இல்லை என்றும், இது மருத்துவமனை சேவைகளை நிலைநிறுத்துவதிலும் பொதுமக்களுக்கு போதுமான சுகாதார சேவையை வழங்குவதிலும் பெரும் சவால்களுக்கு வழிவகுத்தது என்றும் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச கூறினார்.

“பொருளாதார ஸ்திரம் மற்றும் சாதகமான தொழில்முறை சூழலை உறுதி செய்வதன் மூலம் மருத்துவர்கள் நாட்டில் தங்க ஊக்குவிக்கும் ஒரு திட்டத்திற்கான செயற்பாடுகளை சங்கம், சுகாதார அமைச்சிடம் சமர்ப்பித்திருந்தாலும், வைத்தியர்களைப் பாதுகாப்பதற்கான நிரந்தர பொறிமுறையை அமைச்சு இன்னும் ஆரம்பிக்கவில்லை” என்று வைத்தியர் சுகததாச கூறினார்.

அமைச்சின் “குறுகிய பார்வை மற்றும் திறமையற்ற கொள்கைகள்” மருத்துவ நிபுணர்களின் வெளியேற்றத்தை துரிதப்படுத்தியுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“மருத்துவர்களைப் பாதுகாப்பது தமது கொள்கை முன்னுரிமை என்று அரசாங்கமும் சுகாதார அமைச்சரும் பகிரங்கமாகக் கூறினாலும், அமைச்சின் நடவடிக்கைகள் அவர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்குப் பதிலாக அவர்களை விரட்டுகின்றன” என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் சுகாதார அமைப்பில் தொடர்ந்து பணியாற்றும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான தொழில்முறை சூழலை உருவாக்குவதும், அவர்களின் சேவை தொடர்பான கடமைகளுக்கு சட்டப் பாதுகாப்பை உறுதி செய்வதும் சுகாதார அமைச்சின் பொறுப்பு என்று சங்கம் மேலும் வலியுறுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here