போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 3ஆம் திகதி சொகுசு கப்பலில் நடைபெற்ற விருந்துபசார நிகழ்வொன்றில் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் 28ஆம் திகதி மும்பை மேல் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து 4 வாரங்களுக்கு பின்னர் போதைப்பொருள் வழக்கிலிருந்து ஆர்யன்கான் இன்று(30) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.