ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது

0
140

பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்திற்கு அருகில் சில மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.இதன்படி, குறித்த பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் பத்மலால் மானகே தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்திற்கு அருகில் சில மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் 10 பேரின் வகுப்புத்தடைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் குழுவொன்று உபவேந்தருக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், ஒழுக்காற்று சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களுக்கே இவ்வாறு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here