10 ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலை வழங்கும் தாய்லாந்து

0
6

தொழிலாளர் பற்றாக்குறையை நிர்வகிக்க 10,000 இலங்கை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த தாய்லாந்து ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

கம்போடியா மற்றும் தாய்லாந்துக்கு இடையில் அண்மையில் ஏற்பட்ட எல்லை பதற்றங்களுக்கு மத்தியில் தாய்லாந்திருந்து கம்போடியா தொழிலாளர்கள் தமது சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், தாய்லாந்தில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளின்படி, வயதான மக்கள் தொகை மற்றும் குறைந்து வரும் உள்நாட்டு பணியாளர்களை எதிர்கொள்ளும் தாய்லாந்து, விவசாயம், கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறைகளில் ஏற்கனவே மூன்று மில்லியனுக்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களைச் சார்ந்துள்ளது.

தாய்லாந்து தொழிலாளர் அமைச்சர் பொங்கவின் ஜங்ருங்ருங்கிட் கூறுகையில், 30,000 க்கும் மேற்பட்ட இலங்கை தொழிலாளர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர்.

ஆரம்ப கட்டத்தில் 10,000 பேர் பணியமர்த்தப்படுவார்கள். புதிய கொள்கையின் கீழ் நேபாளம், பங்களாதேஷ், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

கடந்த மாதம் தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையே ஏற்பட்ட எல்லை மோதலில் குறைந்தது 43 பேர் கொல்லப்பட்டு 300,000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் இரு நாடுகளும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன, ஆனால் ஆயிரக்கணக்கான கம்போடிய தொழிலாளர்கள் நாடு திரும்பியதால்தாய்லாந்தின் தொழிலாளர் நெருக்கடி மோசமாக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here