‘தலைவன் தலைவி’ திரைப்படம் உலகளாவிய ரீதியாக இந்திய மதிப்பில் ரூ.100 கோடியை கடந்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 25-ம் திகதி விஜய் சேதுபதி நித்யா மேனன் நடிப்பில் வெளியான படம் ‘தலைவன் தலைவி’.
கணவன் – மனைவி உறவினை மையப்படுத்தி வெளியான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது.
இதனால் ஓடிடி வெளியீட்டுக்கு பின்னரும் சில திரையரங்குகளில் திரையிடப்பட்டு வந்தது. தற்போது இப்படம் உலகளாவிய வசூலில் ரூ.100 கோடியை கடந்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சத்யஜோதி நிறுவன தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணியாற்றி இருந்தார்.
‘மகாராஜா’ படத்துக்குப் பின் விஜய் சேதுபதிக்கு வெற்றியைப் பெற்று தந்த படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.