இன்று திங்கட்கிழமை முதல் ஜனாதிபதி செயலகத்தின் பணிகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.
இதேவேளை, ஜனாதிபதி செயலகம் அமைந்துள்ள பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக கோரி முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த செயலகத்தின் பணிகள் 100 நாட்களின் பின்னர் இன்று மீள முன்னெடுக்கப்படவுள்ளன.




