11 கஞ்சா செடிகளுடன் தோட்ட முகாமையாளர் கைது

0
38

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாஸ்கோ தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த உதவி தோட்ட முகாமையாளரை சந்தேகத்தின் பேரில் (01) பிற்பகல் கைது செய்ததாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சாந்த பண்டார தெரிவித்தார்.

உதவி தோட்ட முகாமையாளர் தனது உத்தியோகபூர்வ தோட்ட பங்களாவில் மரக்கறி தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளதாகவும், தற்போது இரண்டு அடி உயரத்திற்கு செடிகள் வளர்ந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட 11 கஞ்சா செடிகளையும், 02.01.2025 நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சாந்த பண்டார மேலும் தெரிவித்தார்.

 

(க.கிஷாந்தன்)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here