50 ஆண்டுகளாக குளிக்காத உலகின் அழுக்கான நபர் மரணம்! வெளியாகிய பின்னணி

0
203

உலகின் அழுக்கு மனிதர் என அழைக்கப்பட்ட அமோவ் ஹாஜி தனது 94 வயதில் மரணம் அடைந்தார்.

மேற்காசிய நாடான ஈரானின் பார்சில் மாகாணம் தேஜ்கா கிராமத்தில் வசித்த அமோவ் ஹாஜி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக குளிக்கவில்லை.

குளித்தால் உடல் நலம் கெட்டு விடும் என நம்பிக்கை கொண்டிருந்த அவரை, சில மாதங்களுக்கு முன், கிராம மக்கள் வலுக்கட்டாயமாக குளிக்க வைத்தனர்.

ஒரு குடிசை வீட்டில் தனியாக வசித்த ஹாஜி, சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த 23ம் தேதி அவர் மரணம் அடைந்துள்ளார்.

அதேவேளை, உலகின் அழுக்கு மனிதர் என அழைக்கப்பட்ட அமோவ் ஹாஜி குறித்து, ‘தி ஸ்ட்ரேன்ஜ் லைப் ஆப் அமோவ் ஹாஜி’ என்ற குறும்படம் 2013ல் வெளியானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here