இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்றைய 3ஆவது நாள் தேனீர் இடைவேளைக்கு முன்னதாக தென்ஆப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் கடுமையாக திணறினர். 2ஆவது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா கேப்டன் பவுமா மட்டும் அரைசதம் அடித்தார்.
முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 159 ரன்னில் சுருண்டது. இந்தியா 189 ரன்கள் சேர்த்தது. 2ஆவது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 153 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இந்தியா 124 இலக்கை எட்ட முடியாமல் 93 ரன்னில் சுருண்டு படுதோல்வியடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்கா அணி இந்திய மண்ணில் இந்தியாவை கடந்த 15 வருடத்திற்கு பின் வீழ்த்தியுள்ளது.
தென்ஆப்பிரிக்கா அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹார்மர் முதல் இன்னிங்சில் 30 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். 2ஆவது இன்னிங்சில் 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். 8 விக்கெட் வீழ்த்திய அவர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
maalaimalar




