20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா வைரஸ் பூஸ்டர் தடுப்பூசி.

0
196

கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கொட்டகலை பகுதியில் வசிக்கும் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா வைரஸ் பூஸ்டர் தடுப்பூசி இன்று (17.12.2021) செலுத்தப்பட்டது.

கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இந்த தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டது.

இதன்படி கொட்டகலை, குடாஓயா, டிரேட்டன், யுனிபீல்ட், திம்புள்ள பத்தனை, போகாவத்தை, மவுண்ட்வேர்ணன், ஸ்டோனிகிளிப், தலவாக்கலை, வட்டகொடை, ஒலிரூட் ஆகிய பிரதேசங்களில் உள்ள 11 கிராம சேவக பிரிவுகளில், உள்ள 20 வயதுக்கு மேற்பட்டவர்களே இவ்வாறு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதனை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசியை ஏற்றிக் கொண்டனர்.

இதில் ஏற்கனவே இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட சுமார் 1000 பேர் 3வது பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டமை குறிப்பிடதக்கது.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here