200 வருட காலம் வாழ்ந்தும் இன்னும் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையிலேயே மலையக மக்கள் வாழ்ந்தும் இன்னமும் அடிப்படை வசதிகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையிலேயே இருக்கின்றனர். இன்றும் தொழிலாளர் ஒருவர் மாத வருமானம் உச்ச பட்சம் 10000 ரூபாவாக இருக்கிறது இந்நிலையில் எவ்வாறு அவர்கள் அவர்களின் உணவு தேவையினையும் கல்வித்தேவையினையும் பூர்த்தி செய்வார்கள்.
இவ்வாறான நிலையில் செட்டிக் நிறுவனமும் கரட்டாஸ் நிறுவனமும் பல வருடங்களாக எல்லாருக்கும் முன்னிருந்து உழைக்கும் எம் மக்களுக்கு உதவி வருகிறது என ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் பங்கு தந்த நிவ்மன் பீரிஸ் தெரிவித்தார்.
செட்டிஸ் நிறுவனத்தில் பெருந்தோட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்றுவோம் எனும் தொனிப்பொருளில் மாணவர்களு;ககு புலமைபரிசில் வழங்கும் நிகழ்வும் இவ்வருடம் முன்னெடுக்கப்படவுள்ள செயப்பாடுகள் தொடர்பாக சிவில் அமைப்புக்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் விளக்கமளிக்கும் கலந்துரையாடல் ஒன்று இன்று (09) ஹட்டன் செட்டிக்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவர் இவ்வாறு தெரிவித்தார்;.
அவர் அங்கு தொடர்;ந்து கருத்து தெரிவிக்கையில் எமது மக்களின் வாழ்கையில் விடுதலை என்று சொன்னால் அது கல்வியை தவிர வேறு ஒன்றும் இல்லை.அரசியல் விடுதலை அதனை கதைக்க முடியாது இன்னும் பலவிதமான விடுதலைகள் தொடர்பாக பேச முடியாது. எனவே தான் கல்விக்காக கரஸ்ட்டாஸ் நிறுவனம் பண உதவிகளை செய்து வருகிறது
ஒரு பரம்பரை வளர வேண்டும் என்றால் 200 மைல் கற்கள் அல்ல 400 மைல் கற்கள் சென்றாலும் கல்வியில் உயர வேண்டும் அப்போது தான் சமூகமாற்றம் ஏற்படும். எமது ஒவ்வொருவரின்தும் ஒரு ஆசை இந்த சுமூகம் ஒரு படி முன்னேற வேண்டும் என்று அதற்காக உதவி செய்பவர்களும் உதவி பெறுபவர்களும் சமூகத்தில் மாற்றம் ஏற்படுவததற்கு உழைக்க வேண்டும் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.
இதன் போது மலையக கல்வி வளர்ச்சிக்காகவும் சமூக மாற்றத்திற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்தனர். இதன் போது வறுமை கோட்டில் கீழ் உள்ள குடும்பங்களில் உயர் தரம் கல்வி பயிலும் ஒரு மாணவருக்கு 5000 ரூபா 30 மாணவர்களுக்கு புலமைப்பரில்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.இந்த மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5000 வீதம் கற்றல் நடவடிக்கைகளுக்காக வழங்கப்படவுள்ளன.
செட்டிக்ஸ் நிறுவனத்தின் மத்திய மாகாண இணைப்பாளர் எஸ் நிக்கலஸ் அவர்கள் இவ் வருட வேலைத்திட்டம் தொடர்பாக தெளிவு படுத்தினார்.
இந்நிகழ்வுக்கு மதகுருமார்கள் ,அதிபர்கள் ஆசிரியர்கள் அரசசாரபற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மலைவாஞ்ஞன்