2024இல் ஏற்படப்போகும் பேரழிவு – பாபா வாங்காவின் கணிப்பால் அச்சம்

0
227

2024 ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்பு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி 2024 இற்கான பாபா வங்காவின் தீர்க்கதரிசனங்களில் பூகம்பம், தீ மற்றும் வெள்ளம் போன்ற பல பேரழிவுகள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் புற்றுநோய்க்கான தீர்வு 2024 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்படும் என பாபா வங்காவின் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.​2024 இல் உலகம் ஒரு பெரிய மாற்றத்தை சந்திக்கும் என்றும் பாபா வங்காவின் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு குவாண்டம் கணினிகளின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரேம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குறித்த பாபா வங்காவின் கணிப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.​ ‘2024 ஆம் ஆண்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது சொந்த நாட்டைச் சேர்ந்த ஒருவரால் படுகொலை செய்யப்படுவார் என குறிப்பிட்டுள்ளார்.

பாபா வங்காவின் இந்தக் கணிப்புத் தான் தற்போது எதிர்காலம் குறித்து அறிய ஆர்வம் காட்டுபவர்களை உலுக்கியுள்ளது.மேலும் ஐரோப்பாவில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரிக்கும் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளார்.

மேலும் 2024 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார்.

அதுமட்டுமின்றி அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் , 2024 ஆம் ஆண்டில் மர்ம நோயால் பாதிக்கப்படுவார் என்றும், அது அவரை காது கேளாதவர் ஆக்கும் என்றும் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார்.​

2024 ஆம் ஆண்டில் சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும் என்றும் ஹக்கர்கள் மிகவும் அதிநவீனமாகி, பவர் கிரிட்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகளை குறிவைப்பார்கள் என்றும் தனது கணிப்புகளின் மூலம் எச்சரித்துள்ளார்.​

உலகப் புகழ்பெற்ற பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் 2024 ஆம் ஆண்டுக்கான தீர்க்கதரிசனங்கள் ருமேனிய ஊடகங்களில் வெளியாகியுள்ளன.பல்கேரிய நாஸ்டர்டாமஸ் பாபா வங்கா, பல்கேரிய நாஸ்டர்டாமஸ் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார்.

பல்கேரியாவின் சோபியா பகுதியில் வசித்து வந்த பாபா வங்கா கடந்த 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் திகதி மரணம் அடைந்தார்.பாபா வங்கா உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளது.​

இதனால் இவருடைய கணிப்புகள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் பெற்று வருகின்றன.குறிப்பாக செர்னோபில் அணு உலை விபத்து, பிரிட்டன் இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியன் கலைப்பு, அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல், கறுப்பின அதிபர், பிரிஸிட் போன்றவை பாபா வங்காவின் கணிப்புகளை நிஜமாக்கியுள்ளன.​

இதன்காரணமாக உலகின் பெரும்பாலான மக்கள் இவருடைய கணிப்புகளை உற்று நோக்கி வருகின்றனர்.2023 ஆம் ஆண்டு குறித்து பாபா வங்கா கூறிய கணிப்புகளும், கொஞ்சம் கொஞ்சமாக அரங்கேறி வருகிறது.அதன்படி வளர்ந்த நாடு ஒன்று அணு ஆயுத தாக்குதலில் ஈடுபடும் என்று தெரிவித்திருந்தார்.

அதற்கு ஏற்றது போல் ரஷ்ய உக்ரைன் போர் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்து வருவது பாபா வங்காவின் கணிப்போடு ஒத்துப்போகிறது. அவரது கணிப்புப்படியே பிரிட்டன் ராணியின் மரணமும் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here