24 கரையோரப் பகுதிகள் சுற்றுலாத் தலங்களாக மாற்றம்

0
165

இதற்குரிய நடவடிக்கைள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் அருந்தக பெர்னாண்டோ கூறினார். இலங்கையில் 24 கரையோரப் பகுதிகள் சுற்றுலாத் தலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்திமற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்துக்கு பங்களிக்கும் வகையில் தற்காலிகமாக இந்த சுற்றுலாத்தலங்களை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் பணிப்புரையின்பேரில் கொழும்பு, எல்ல,நுவரெலியா, கண்டி மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகள் சுற்றுலாப் பயணிகளை கவரும் பகுதிகளாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இதற்குரிய நடவடிக்கைள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் அருந்தக பெர்னாண்டோ கூறினார்.

தற்போது இலங்கையில் சுற்றலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறான திட்டங்கள் மேலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், தற்போது வரை இலங்கையில் 9 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த மாதத்தின் முதல் 20 நாட்களில் சுமார் 90 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில், 15 ஆயிரத்து 330 இந்திய சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். அத்துடன், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து 10 ஆயிரத்து 184 சுற்றுலாப் பயணிகளும் சீனாவிலிருந்து 5 ஆயிரத்து 963 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

ஜேர்மனியிலிருந்து 5 ஆயிரத்து 141 பேரும், ரஷ்யாவிலிருந்து 4 ஆயிரத்து 561பேரும் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here