25 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கை ஆரம்பம்

0
189

200 இற்கும் அதிக மாணவர்களைக்கொண்ட அனைத்து ஆரம்பப்பிரிவு பாடசாலைகளிலும் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கை ஆரம்பமாகும் கல்வி அமைச்சின் செயலாளர் இன்று அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற கொரோனா ஒழிப்பு செயலணிக் கூட்டத்தின்போது இதற்கான பரிந்துரை கிடைத்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் பாடசாலைகளை 4 கட்டங்களின்கீழ் திறப்பதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதன்படி 200 இற்கும் குறைவான மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகள் நேற்று முதல் திறக்கப்பட்டன.இந்நிலையில் 2ஆம் கட்டமாக 200 இற்கும் அதிக மாணவர்கள் கல்வி பயிலும் அனைத்து ஆரம்பப்பிரிவு பாடசாலைகளும் திறக்கப்படவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here