30 அடி பள்ளத்தில் விழுந்த டிப்பர் லொறி- கந்தப்பளையலி சம்பவம்!

0
115

இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கந்தப்பளை, கொங்கொடியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், அறுவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.

கந்தப்பளை பிரதான நகரில் இருந்து கொங்கோடியா பகுதிக்கு மறக்கறி சேகரித்து ஏற்றிச்சென்ற டிப்பர் லொறியொன்று வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் 43 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த 6 பேரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here