40,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

0
2

வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 600,000 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்களை நாட்டுக்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற ஒருவர் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி, கன்னேபானவில் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர், டுபாய் நாட்டில் வீட்டு வேலைசெய்துள்ளதுடன் இன்று அதிகாலை ஓமானின் மஸ்கட்டிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரின் பயணப் பைக்குள் 40,000 சிகரெட்டுக்கள் அடங்கிய 200 சிகரெட் அட்டைப் பெட்டிகள் கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here