நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமைமேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல்,சப்ரகமுவ மற்றும்மத்தியமாகாணங்களிலும்காலி மற்றும்மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில்75 மி.மீ அளவான ஓரளவு பலத்தமழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவில்மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவாமாகாணத்திலும்அம்பாறைமற்றும்மட்டக்களப்புமாவட்டங்களிலும் சிலஇடங்களில் மாலையில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்தியமலைநாட்டின்மேற்கு சரிவுப்பகுதிகளிலும்வடக்கு மற்றும்வடமத்திய மாகாணங்களிலும்புத்தளம்,ஹம்பாந்தோட்டைமற்றும்திருகோணமலைமாவட்டங்களிலும் அவ்வப்போதுமணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர்வரையானவேகத்தில்பலத்தகாற்றுவீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.