மாடி வீடுகளில் குடியிருக்கும் குறைந்த வருமானம் பெறும் 50,000 குடும்பங்களுக்கு வாடகை அறவிடுவதை இடைநிறுத்தி, அந்த வீடுகளின் உரித்துரிமையை அவர்களுக்கே வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.