6 நாட்களில் 36 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை!

0
11

ஜூலை மாதத்தின் முதல் 6 நாட்களில் மட்டும் 36,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு இதுவரை நாட்டிற்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 120,446 ஆகும்.

ஜூலை மாதத்தின் முதல் 6 நாட்களில் இந்தியாவில் இருந்து 8,053 பயணிகள் வந்துள்ளதுடன் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்திலிருந்து 3,562 சுற்றுலாப் பயணிகள், அவுஸ்திரேலியாவிலிருந்து 2,674 பேர் மற்றும் சீனாவிலிருந்து 2,362 பேர் நாட்டிற்கு வந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here