6 நாட்டவர்களுக்கு அமெரிக்காவில் நுழைய தடை!

0
4
NEW YORK, NEW YORK - MAY 31: Former President and Republican Presidential candidate Donald Trump speaks during a press conference at Trump Tower on May 31, 2024 in New York City. The former president was found guilty on all 34 felony counts of falsifying business records in the first of his criminal cases to go to trial. (Photo by David Dee Delgado/Getty Images)

அமெரிக்காவில் நுழைய மேலும் 36 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தடை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான அரசு நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவின் பாதுகாப்பு கருதி ஏற்கனவே ஏராளமான நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்பு 41 நாடுகள் பட்டியலில் சிவப்பு பிரிவில், ஆப்கானிஸ்தான், பூடான், கியூபா, ஈரான், சிரியா, வட கொரியா, ஏமன் உட்பட 11 நாடுகள் இடம்பெற்றிருந்தன. இந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது முழுமையாக நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, ஓரஞ்ச் பிரிவில், ரஷ்யா, பாகிஸ்தான், மியான்மர் உட்பட, 10 நாடுகள் இடம்பிடித்துள்ளன. இந்த நாடுகளுக்கு முழுமையான தடை விதிக்கவில்லை. குறிப்பிட்ட எண்ணிக்கையில், குறுகிய காலத்துக்கான விசா மட்டுமே வழங்கப்படும், என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாதுகாப்பு மற்றும் விசா விதிமீறல்கள் உள்ளிட்டவையை அடிப்படையாக வைத்து, அமெரிக்காவில் நுழைய 36 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு முழு அல்லது பகுதியளவிலான தடைகளை விதிக்க திட்டமிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஆபிரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியத்திட்குட்பட்ட அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி நாடுகளும் அடங்கியுள்ளன.

இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வரும் போது, அவர்கள் தொடர்பான தகவல்களை உறுதி செய்வதில் உள்ள குறைபாடுகளை, 60 நாட்களுக்குள் தீர்க்க வேண்டும். தவறும்பட்சத்தில் அவர்களுக்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here