கர்ப்பவதிகளுக்கு பூஸ்டர் தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சு மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் நிறுவகத்தின் தடுப்பூசி வழிகாட்டல் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் மருத்துவர் பிரதீப் டி சில்வா தெரிவித்தார். இதன்படி, 6 மாதங்களுக்கு மேல் உள்ள கர்ப்பவதி தாய்மார்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை, 60 கர்ப்பவதித் தாய் மார்கள் கோவிட் நோய்த் தொற்றால் இறந்தனர்.
எவ்வாறாயினும், கர்ப்பவதி தாய்மார்களுக்கு கொவிட் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, கொவிட் காரணமாக இறப்பு மற்றும் தாய்வழி நோயுற்றவர்களின் எண்ணிக்கையில் கணிசமான குறைவு ஏற்பட்டுள்ளது.
கோவிட் நோயால் கர்ப்பவதி தாய்மார்கள் மருத்துவமனையில் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின் றனர். ஆனால், அவர்களில் யாரும் ஆபத்தான நிலையில் இல்லை, இது தடுப்பூசி திட்டத்தின் விளைவாகும். பூஸ்டர் தடுப்பூசி கோவிட் – 19 தொற்று ஏற்படும் அபாயத்தை மேலும் குறைக்கும் – என்றார்.