7 மாதங்களில் 3504 முப்படை சிப்பாய்கள் கைது!

0
3

2024 ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் மே 20 ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தில் சரணடையாத முப்படை வீரர்களை கைது செய்ய பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி 2025 பெப்ரவரி 22 முதல் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2025 பெப்ரவரி 22 முதல் ஒகஸ்ட் 3 ஆம் திகதி வரையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3504 முப்படை வீரர்களை கைது செய்துள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட 3504 பேரில், 2937 இராணுவ வீரர்கள், 289 கடற்படை வீரர்கள், 278 விமானப் படை வீரர்கள் உள்ளடங்குவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here