கினிகத்தேனை -அட்டன் பிரதான பாதையில் லொறி விபத்து

0
136

கினிகத்தேனை -அட்டன் பிரதான பாதையில் தியகல பிரதேசத்தில் இன்று பிற்பகல் வேளையில் வாகன விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற லொறி ஒன்று தியகல பிரதேசத்தில் திடீரென அதன் கட்டுப்பாட்டை இழந்து பிரதான பாதையில் இருந்து விலகி இழுத்துச் சென்ற போது பிரதான பாதையில் ஓரமாக பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு வேலியில் முட்டிமோதி நின்றுள்ளது. இதனால் பாரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட லொறியில் சாரதியும் உதவியாளரும் பயணித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சோ. ஸ்ரீதரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here