இவ்வாண்டுக்கான தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை நடத்தப்படவுள்ள தினங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதனை தொடர்ந்து கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.