எதிர்வரும் காலத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மாத்திரமே பொதுப் போக்குவரத்து பேருந்தில் பயணம் செய்ய முடியுமான நடைமுறை ஒன்றை உருவாக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனூடாக மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்தை முன்னெடுக்க முடியும் என குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்டவர்களுக்கு பேருந்தில் பயணம் செய்ய முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் இலங்கையில் கொவிட் தடுப்பூசி போடாதவர்கள் பொது போக்குவரத்தில் பயணிப்பதில் சிக்கல் நிலை வரலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்கள் மாத்திரம் பேருந்துகளில் பயணிக்க கூடிய முறை ஒன்றை தயார் செய்யுமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, தடுப்பூசிகள் இரண்டை பெற்றுக் கொண்டுள்ள நபர்கள் பேருந்துகளில் பயணிப்பதற்கு முன்னிரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.