நாட்டை திறப்பது தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு.

0
92

வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நாட்டை திறப்பதற்கான திட்டங்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி தனக்கு ஆலோசனை வழங்கியதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய, ஒவ்வொரு துறையினரும் தமக்கான திட்டங்களை தற்போது தயாரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் பின்னர், அரச ஊழியர்களை சேவைக்கு அழைக்கும் விதம் குறித்த கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here