பல நோயாளர்களை காப்பாற்றி விட்டு தன்னுயிரை நீத்த சாரதி

0
254

வவுனியாவிலிருந்து நோயாளர்களை யாழ். போதனா வைத்தியசாலைக்கு வேனில் ஏற்றிச் சென்ற வேனின் சாரதி திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

வவுனியா வீரபுரம் பகுதியைச் சேர்ந்த 61 வயதான நபரே உயிரிழந்துள்ளார். வேனில் பயணிகளை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது பூநகரி சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் திடீரென சாரதிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

உடனே அவர் வாகனத்தை வீதியோரமாக நிறுத்தியுள்ளார். பின்னர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

மாரடைப்பு ஏற்பட்டவுடன் வீதியோரமாக வாகனத்தை நிறுத்தியமையால் வாகனத்தில் இருந்தவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here