டயகம பகுதியில் ஆக்ரோயா ஆற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு.

0
186

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம ஆக்ரோயா ஆற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம்   நேற்று (06) மாலை ஐந்து மணியளவில் மீட்கட்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.
இப்பிரதேசத்தில் உள்ள ஒருவர் ஆற்றுப்பகுதியில்  சென்றுகொண்டிருந்தபோது ஆற்றில் சடலம் மிதப்பதை கண்டு பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.

இவ்வாறு மீட்கப்பட்ட பெண் 53 வயதுடைய  சாமிநாதன் தங்கேஸ்வரி டயகம 5 பிரிவை சேர்ந்தவர் என பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளன.
சடலம் பிரேத பரிசோதனைக்காக  நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை டயகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கே.சுந்தரலிங்கம் .

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here