பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் கணக்கு முடக்கம்

0
230

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் டுவிட்டர் பக்கம் இன்று அதிகாலை சிறிது நேரம் முடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் டுவிட்டர் பக்கத்தை உலகில் பல மில்லியன் மக்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். அவருடைய டுவிட்டர் பக்கம் PM@narendramodi என்ற பெயரில் உள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு ஹே க்கர்களால் சிறிது நேரம் முடக்கப்பட்டது. இதனால் பரபரப்பு நிலவியது. ஆனால் சிறிது நேரத்தில் சரி செய்யப்பட்டது.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‛ பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டது. பிட்காயினை இந்தியாவில் சட்டப்பூர்வமாக்க போவதாக ஹே க்கர்கள் மோடியின் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தனர். இதனால் ஹேக் செய்யப்பட்ட நேரத்தில் பதிவான விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டாம் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here