எரிவாயுவின் நிர்ணய விலையினை சகல விற்பனை நிலையங்களிலும் காட்சிப்படுத்த வேண்டுகோள்!

0
152

சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக எரிவாயுவினை விற்பனை செய்வதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

எரிவாயுவின் நிர்ணய விலையினை பொதுமக்கள் அறியும் படி அதன் சகல விற்பனை நிலையங்களிலும் காட்சிப்படுத்த வேண்டும் என குறித்த அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அதிக விலைக்கு எரிவாயுவினை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here