நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 214 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த அனைவரும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், நாட்டில் நேற்றைய நாளில் மேலும் 6 கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் குறித்த கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.