ஜனாதிபதி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு! விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள மாற்றம்

0
200

உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.தற்போது எட்டாயிரமாக இருக்கும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை நான்காயிரமாக குறைக்க வேண்டும் என்பது ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்.

உள்ளூட்சி மன்ற உறுப்பினர்கள் மூலம் மக்களுக்கு மிகவும் வினைத்திறனான சேவையை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் உள்ளுராட்சி மன்ற சட்டம் திருத்தியமைக்கப்படும்.அடுத்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு இந்தத் சட்டத்தை திருத்தியமைக்க எதிர்பார்ப்பதாக ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here