இலங்கைக்கு வருகதரவுள்ள தமிழகத்தின் பிரபல நடிகர்! ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

0
201

தமிழகத்தின் முன்னணி நடிகராக வலம்வரும் சூர்யா நடிக்கும் 42 வது திரைப்படத்தின் படிப்பிடிப்புக்கள் இலங்கையிலும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் ஏற்கனவே கோவா, சென்னை போன்ற இடங்களில் இடம்பெற்றுள்ள நிலையில், இலங்கையின் வனப்பகுதிகளிலும் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்காக, படிப்பிடிப்புக்குழு விரைவில் இலங்கைக்கு வரவுள்ளது. 1000 ஆண்டுகள் பழமையான கதையைக் கொண்ட இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் 2023ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பொலிவூட் நடிகை திஷா பதானி (Disha Patani) நாயகியாக நடிக்கவுள்ளார்.

திரைப்பட குழுவினர் ஏற்கனவே ஐரோப்பாவில் இரண்டு நாடுகளான பல்கேரியா மற்றும் செர்பியாவை தேர்வு செய்துள்ள நிலையில், கம்போடியா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் ஃபிஜி ஆகிய நாடுகளிலும் படப்பிடிப்புக்களை மேற்கொள்ள தயாரிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.

இருப்பினும் இதில் மூன்று நாடுகளே இறுதியில் படப்பிடிப்புக்களுக்காக தெரிவுசெய்யப்படவுள்ளன.

இந்த திரைப்படம் சூர்யாவின் அதிக நிதிச்செலவிலான திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா, இந்த திரைப்படத்தில் 5 விதமான கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக 10 மொழிகளில் தயாரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here