ஓமானில் உள்ள 74 இலங்கைப் பெண்களின் உருக்கமான கோரிக்கை

0
139

ஓமான் நாட்டுக்கு பணிப் பெண்களாக அழைத்துச் செல்லப்பட்டு, பல்வேறு சித்திரவதையால் இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்து 9 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 74 பணிப்பெண்களை காப்பாற்றி நாட்டிற்கு அனுப்புமாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் உருக்கமாக கோரிக்கை விடுத்து காணொளி வெளியிட்டுள்ளனர்.

நாட்டிலுள்ள முகவர்கள் ஊடாக ஓமான் நாட்டிற்கு பணிப்பெண்களாக சென்ற பெண்கள் அங்குள்ள வீடுகளில் வீட்டின் உரிமையாளர்களால் அடித்து மற்றும் நெருப்பால் சூடு வைத்தும் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் மற்றும் சம்பளம் வழங்காமை போன்ற பல்வேறு சித்திரவதை காரணமாக அங்கிருந்து வெளியேறி இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

இவ்வாறு தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளவர்களை (சேவ் கவுஸ்) என்ற இடத்தில் தங்கவைத்துள்ளதுடன் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு உறவினர்களுடன் கூட தொடர்பு கொள்ள முடியாதளவிற்கு அடைத்து வைத்துள்ளனர்

இவர்களை நாட்டுக்கு அனுப்பாது 9 மாதங்கள் வரை தடுத்து வைத்துள்ளதுடன், பலர் பல நோய்களினால் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கி வருகின்றதுடன் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் போல எங்களை நடாத்துகின்றனர்.

இங்கு நடக்கும் அட்டூழியங்கள் எதுவும் வெளியே தெரிவிக்க முடியாத நிலையிலுள்ளதுடன், இங்கிருந்து நாட்டுக்கு செல்லுகின்ற பெண் ஒருவரின் கையடக்க தொலைபேசியில் நாங்கள் உரையாடி அவரிடம் இந்தனை வெளியிடுமாறு தெரிவித்து கதைத்து அனுப்பியுள்ளோம். எனவே எங்களை இங்கிருந்து காப்பாற்றுங்கள் கைகூப்பி கேட்கின்றோம். என கோரிக்கை விடுத்து வெளியிட்டுள்ள வீடியோவில் பதிவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here