வெளிநாட்டிற்கு பல கனவுகளுடன் சென்ற இந்திய பெண்! பட்டினியுடன் சாலையில் திரியும் பரிதாபம்

0
103

சையிதா தொடர்பான வீடியோ காட்சி ட்விட்டரில் வெளியாகியுள்ளது. இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் சையிதா ஹவாஜ் பாத்திமா.

இவரது மகள் சையிதா லுலூ மின்ஹாஜ் குவைதி.சையிதா எம்.எஸ். மேல் படிப்புக்காக கடந்த 2021-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள சிகாகோவுக்கு சென்றார். அங்கிருந்து தினமும் தனது தாயிடம் செல்போனில் பேசி வந்தார்.

இந்நிலையில் சையிதா 2 மாதங்களாக தாயை தொடர்பு கொள்ளவில்லை.

இதனிடையே சிகாகோவில் அவரின் பொருட்கள் அனைத்து கொள்ளை போனதாக கூறப்படுகிறது.இதையடுத்து தெருக்களில் பசியோடு, மனநிலை பாதித்தவர் போல் சையிதா சுற்றி திரிகிறார் என்ற அதிர்ச்சி தகவல் பாத்திமாவுக்கு கிடைத்தது.

உடனடியாக அவர் தன்னுடைய மகளை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.அவருக்கு வேண்டிய மருத்துவ ரீதியான உதவி உள்பட அனைத்து உதவியும் வழங்கப்படும் என இந்திய துணை தூதரகம் உறுதி அளித்து உள்ளது.

இதனிடையில் சையிதா தொடர்பான வீடியோ காட்சி ட்விட்டரில் வெளியாகி காண்போர் மனதை உலுக்கியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here