இலங்கையில் குறைந்த விலையில் எரிபொருள் விற்க அனுமதி கோரும் நிறுவனம்!

0
181

எரிபொருளுக்கு அரசாங்கம் தற்போது நிர்ணயித்துள்ள விலைக்கும் குறைவாக எரிபொருளை விற்பனை செய்வதற்கு அனுமதிக்குமாறு சினோபெக் நிறுவனம், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் அந்த கோரிக்கைக்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இதுவரை எவ்வித பதிலும் வழங்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினோபெக் நிறுவனம் ஒவ்வொரு வகை எரிபொருளையும் எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் விலையை விட 3 ரூபாவிற்கு குறைந்த விலையில் விற்க வேண்டும் என்று கோரியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here