உடல், கழுத்து, கை, கால்கள் என ஒவ்வொரு நிறமும் சிலருக்கு மாறியிருக்கும். எல்லா நிறமும் ஒரே மாதிரியாக இருந்தால் தான் சருமநிறம் பொலிவாக இருக்கும்.ஆனால் பெரும்பாலும் எல்லோரும் வெளியில் செல்வதால் ஆடைகள் தவிர்த்து சருமம் வெளிப்படும் நிறம் கருப்பாக, கடினமாக தெரியும்.சிலர் நல்ல நிறமாக இருந்தாலும் சூரிய ஒளி உடலில் படும் இடங்கள் மட்டும் கருப்பாக இருப்பதை பார்க்கலாம்.
சற்று கவனமுடன் இருந்தால் இதை சரிசெய்யலாமாம். இப்பதிவின் மூலமாக எவ்வாறு இப்பிரச்சினையை நிவர்த்தி செய்யலாம் என பார்க்கலாம்.
வெயிலில் பாதுகாப்பு இல்லாமல் வெளியே செல்வது இதற்கு முதல் காரணமாக சொல்லலாம்.
குடை, சன்ஸ்க்ரீன், துப்பட்டா என எதுவுமே இல்லாமல் செல்லும் போது அந்த பாதிப்பு சருமத்துக்கு ஏற்படுகிறது.
ஏனெனில் சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் உடலில் படும் போது சருமம் கருமையாகவும் அதிக வயதான தோற்றத்தையும் அளிக்கிறது.
அழகின் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு இது அதிக வருத்தத்தை காட்டும்.
உப்பு தண்ணீரில் குளிக்கும் போது அதன் உப்பு சருமத்தில் படிந்து கருமை ஆகும்.
நீச்சல் குளத்தில் குளோரின் தண்ணீர் போன்றவற்றில் குளிக்கும் போதும் சருமத்தின் நிறமும் மாறும்.சில பெண்கள் பிசிஓஎஸ், ஹார்மோன் பிரச்சனை போன்றவற்றுக்காக மருந்துகள் எடுப்பார்கள். இத்தகைய மருந்துகள் எடுப்பது கூட சருமத்தில் கருந்திட்டுக்களை உண்டு செய்யலாம்.
சிலர் கெமிக்கல் கலந்த கடினமான பொருட்கள் அதாவது தடை செய்யப்பட்ட இராசயனம் கலந்த பொருள்களை பயன்படுத்துவார்கள்.
இதனால் சருமம் பாதிக்கப்பட்டு கருமை நிறமாக மாறலாம். முதலில் பொலிவாக இருப்பது போன்று தோன்றினாலும் நாளடைவில் இவை சருமத்தில் மோசமான பாதிப்பை உண்டு செய்யலாம்.
கடினமான அழகு பொருள்களை பயன்படுத்துவது, மேக் அப் போட்டாலும் அதை வீட்டுக்கு வந்து கலைக்காமல் அப்படியே படுத்துவிடுவது, நகங்கள் படுவது, கைகள் அழுக்குடன் சருமத்தில் படிவது, முகக்கண்ணாடி கன்னங்களின் மீது படிவது என எல்லாமே சருமத்தின் நிறமாற்றத்தை உண்டு செய்யலாம்.
ஹேர் கலர் அடிக்கடி போட வேண்டாம். அதிலும் அமோனியா, பிபிடி இல்லாதவற்றை தான் பயன்படுத்த வேண்டும்.
அடிக்கடி போடாமல் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இலேசான டச் அப் செய்தால் கூட போதுமானது.
சிலருக்கு கழுத்து மட்டும் கருப்பாக இருக்கும். சிலருக்கு நெத்தி மட்டும் கருப்பாக இருக்கும்.இவர்கள் அனைவருக்கும் சரும பரிசோதனை செய்து உரிய காரணங்களை அறிந்து சிகிச்சை அளித்தால் கருந்திட்டு மறையும்.
கருந்திட்டுக்கள் இருப்பவர்கள் போட வேண்டிய பேக் ஒன்று இப்போது பார்க்கலாம்.
முல்தானிமிட்டி – 2 டீஸ்பூன்
கிளிசரின் – அரை டீஸ்பூன்
பன்னீர் – தேவைக்கேற்ப
அனைத்தையும் குழைத்து கருந்திட்டு இருக்கும் இடங்களில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும்.
பிறகு வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் சுத்தம் செய்து வந்தால் கருமை குறையும்.
கடலை மாவு -2 டீஸ்பூன்
தயிர் – அரை டீஸ்பூன்
கஸ்தூரி மஞ்சள் – 1 சிட்டிகை
இந்த மூன்றையும் கலந்து கருந்திட்டுக்கள் இருக்கும் இடத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தம் செய்தால் கருந்திட்டுக்கள் மறையும்.
இது சருமத்தையும் பொலிவாக வைக்கும்.
மேற்சொன்ன இந்த இரண்டு பேக் தினசரி செய்ய வேண்டியதில்லை. வாரத்தில் இரண்டு நாட்கள் செய்தால் போதும் கருந்திட்டுக்கள் மறையும்.
இதனோடு வெயிலில் செல்லும் போது சன்ஸ்க்ரீன் பயன்படுத்துங்கள்.உடலை நீரேற்றமாக வைத்திருங்கள். பழங்கள், காய்கறிகள் என்று சருமத்துக்கு ஊட்டமளிக்கும் உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
கருந்திட்டுக்கள் மறைந்து அழகான சருமத்தை பெறுவீர்கள்.