அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணாமாக நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பின் சில பகுதிகளில் 15 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
குறித்த பகுதிகளில் இன்று மாலை 5 மணி முதல் நாளை காலை 8 மணிவரை இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணாமாக நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த நிலையில், தேவையான நீரை சேகரித்து வைக்குமாறு தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்புச் சபை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.