பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

0
222

2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் தவணை ஆரம்பம் பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளின் இந்த வருடத்திற்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் டிசம்பர் 22 ஆம் திகதி முடிவடையும் எனவும் இரண்டாம் கட்டம் பெப்ரவரி 2 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நவம்பர் 1 ஆம் திகதி முதல் ஆரம்பமானது.

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதி முதல் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here