அஸ்வெசும பயனர்களுக்கான அறிவித்தல்

0
154

அஸ்வெசுமவிற்கு உரித்தான 1,406,932 குடும்பங்களுக்கு ஒக்டோபர் மாதத்துடன் தொடர்புடைய 8,775 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது உத்தியோகபூர்வ X கணக்கில் குறிப்பொன்றை இடும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, நாளை (05) முதல் அஸ்வெசும பயனாளிகளின் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் பரிசீலனை செய்யப்பட்ட தெரிவு செய்யப்பட்ட பின்னர் தெரிவு செய்யப்படும் நபர்களுக்கு ஜூலை மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் நிவாரணங்கள் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here