பல மாகாணங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு: பனிமூட்டமான நிலை காணப்படும்

0
147

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வளி மண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ,மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இதனடிப்படையில், பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் வருமாறு…

அனுராதபுரம் – அவ்வப்போது மழை பெய்யும்.

மட்டக்களப்பு – அவ்வப்போது மழை பெய்யும்.

கொழும்பு – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

காலி – அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

யாழ்ப்பாணம்- அவ்வப்போது மழை பெய்யும்.

கண்டி – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நுவரெலியா – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இரத்தினபுரி – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

திருகோணமலை – அவ்வப்போது மழை பெய்யும்.

மன்னார் – அவ்வப்போது மழை பெய்யும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here