கம்பளையில் மரம் முறிந்து விழுந்து ஐந்து வயது மாணவன் பரிதாப பலி

0
128

கம்பளை பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் வளாகத்தில் மரமொன்று மாணவர்கள்மீது முறிந்து விழுந்துள்ள சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என்று அவ்வமைப்பின் செயலாளர் வசந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

கம்பளை பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் வளாகத்தில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில், கம்பளை இல்லவத்துர பகுதியைச் சேர்ந்த ஐந்து வயது மாணவர் ஒருவர் பலியானார். மேலும் இரு மாணவர்கள் காயம் அடைந்தனர்.

அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக, கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அவர் தொடர்ந்தும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here