இரத்தக் கறைகளுடன் சடலமாக மீட்கப்பட்ட 16 வயது சிறுமி: தொடரும் விசாரணை

0
61

முகத்தில் இரத்தக் கறையுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்த 16 வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நிவித்திகல, வடாபொத, யொவுன் கிராமத்தில் உள்ள இறப்பர் செய்கை நிலத்திற்கு அருகில் உள்ள நடைபாதையில் நேற்று (08) நிவித்தகல காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.

வடாபொத, யொவுன் கிராமத்தில் வசித்து வந்த 16 வயதான பாடசாலை மாணவியொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இறந்தவரின் தாயார் வடாபொத கோவிலுக்கு அருகில் கடை நடத்தி வருவதோடு, சம்பவத்தன்று சிறுமி பாடசாலைக்கு செல்லாததால் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.இதனையடுத்து குறித்த சிறுமியை கடைக்கு வருமாறு தாய் தொலைபேசி அழைப்பொன்றை விடுத்த கடைக்கு வருமாறு கூறியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறுமி கடைக்குச் செல்வதில் தாமதம் ஏற்பட்டதால், கடையில் இருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த தாய், றப்பர் தோட்டத்தின் நடுவில் உள்ள நடைபாதையில் சென்று கொண்டிருந்தபோது, ​​சந்தேகத்துக்குரிய வகையில் சிறுமி உயிரிழந்து கிடந்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிவித்திகல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here