தேங்காய்க்கு தட்டுப்பாடு என்றால் மாற்றீடு உள்ளது

0
77

நாட்டில் தேங்காய் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுக்கு தீர்வாக சந்தையில் கிடைக்கும் தேங்காய் பால் பவுடர் அல்லது திரவ தேங்காய் பாலை பயன்படுத்த நுகர்வோர் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என தென்னை அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது.

தேங்காய் விளைச்சலில் 60 வீதத்திற்கும் அதிகமானவை உள்நாட்டு பாவனைக்காக செலவிடப்படுவதாகவும் தென்னை அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது.

இந்நிலையில் தேங்காய்ப்பால் அல்லது திரவ தேங்காய்ப் பாலை பாவிப்பதன் மூலம் தேங்காய் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு ஓரளவுக்கு தீர்வு காண முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதேசமயம் தற்போது சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 120 ரூபா தொடக்கம் 180 ரூபா வரை காணப்படுவதாகவும் சில பிரதேசங்களில் தேங்காயின் அளவுக்கேற்ப விலை நிர்ணயிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here