சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 76 பேர் கைது!

0
8

மே 26 முதல் ஜூன் 07 வரை கடற்படை நடத்திய தேடுதல் நடவடிக்கைகளின் போது, பல்வேறு இடங்களில் பல்வேறு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைகளின் மூலம், இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட 20 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தின் கடைக்காடு மற்றும் புதுமாத்தளன், திருகோணமலையின் கல்லடிச்சேனை,அடுக்குபாடு, கோட்பே,பொடுவகட்டு, குச்சவெளி மற்றும் சல்பே ஆறு மற்றும் மட்டக்களப்பின் பாலமின்மடு ஆகிய கடற்கரை மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கி மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், மின் விளக்குகளை பயன்படுத்தி இரவில் சட்டவிரோதரமாக சுழியோடி கடலட்டைகளை பிடித்த 76 சந்தேக நபர்களுடன் 20 டிங்கிகள் மற்றும் 17 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் ஆகியன கைப்பற்றப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கைகளின் போது, கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் மீன்பிடி படகுகள் யாழ்ப்பாணம், திருகோணமலை, ஈச்சிலம்பத்து, முல்லைத்தீவு, குச்சவெளி, கோட்பே மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் உள்ள மீன்வள மற்றும் நீர்வளத் துறை அலுவலகங்களுக்கு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here