வயலிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

0
3

கம்பஹாவில் மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உன்னாருவ பிரதேசத்தில் உள்ள வயல் ஒன்றிலிருந்து நேற்று வியாழக்கிழமை (12) மாலை பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

35 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொட்ரபான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here