கடல் கொந்தளிப்பு-மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

0
3

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (14) பிற்பகல் 02.30 மணிக்கு வெளியிடப்பட்ட குறித்த அறிவிப்பு நாளை (15) பிற்பகல் 02.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரைப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு சுமார் 60-70 ஆக காணப்படும் அத்துடன் கடல் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.

எனவே அந்தப் பகுதிகளில் மக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கடல் மற்றும் மீனவ சமூகங்கள் மேற்கூறிய கடல் பகுதிகளில் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here