Zee Tamil தொலைக்காட்சியில் இனி இலங்கை தமிழர்களுக்கு இடமில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
Zee Tamil தொலைக்காட்சியில் இடம்பெறும் சரிகமபா நிகழ்ச்சியில் இலங்கை போட்டியாளர்கள் மோசமான சூழலில் வாழ்வதாக சித்தரிப்பதாக பலராலும் விமர்சனம் முன்வைக்கப்பட்ட நிலையில் தொலைக்காட்சியின் சிரேஷ்ட ஊடகவியலாளர் அந்தணன் இதனை தெரிவித்துள்ளார்.
“இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளியில், இலங்கையிலிருந்து இந்திய தொலைக்காட்சி ஊடகங்களில் பாடல் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் இளையோரை அனுதாபமாக கண்பித்தல் மற்றும் இலங்கையின் போர் சூழலை காரணமாக கூறி பாடகர்களை துயரத்துடன் வாழ்வதாக சித்தரித்தல் போன்ற விடயங்கள் ஈழத் தமிழர்கள் மனதை புண்படுத்தியுள்ளது.
இது ஈழத் தமிழர்கள் பலரும் தங்களது கவலைகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தனர்.
இதனை கருத்தில் கொண்டு Zee Tamil தொலைக்காட்சியில் இனி இலங்கை தமிழர்கள் பங்கேற்பதை தவிர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.