கொழும்பு மாநகர மேயர் என்றாவது ஒருநாள் தனது அரசாங்க அதிகாரத்தை இழந்து நீதியின் முன் நிறுத்தப்படுவார் என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
கொழும்பு மாநகர மேயர் கடந்த காலங்களில் இரகசிய வாக்கெடுப்பிற்கு எதிராக இருந்துள்ளார். ஆனால் அதனை மறந்து இன்று அவர் இரகசிய வாக்கெடுப்பின் மூலமாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதற்காக இவர் இப்போது இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் தனது அரசாங்க அதிகாரத்தை இழந்து நீதியின் முன் நிறுத்தப்படுவார்.
கடந்த காலங்களில் மக்கள் விடுதலை முன்னணி இரகசிய வாக்கெடுப்பிற்கு எதிராக பலதடவைகள் கருத்துத் தெரிவித்துள்ளன.
குறிப்பாக இந்த பாராளுமன்றத்தில் தற்போதைய ஜனாதிபதி கடந்தகாலங்களில் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும்போது பல தடவைகள் இரகசிய வாக்கெடுப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இரகசிய வாக்கெடுப்பால் மக்களின் யோசணை வெளியில் தெரிவதில்லை. அதனால் இரகசிய வாக்கெடுப்பில் தான் டீல் போகிறது. மக்கள் விடுதலை முன்னணி தினமும் கூறுவது இரகசிய வாக்கெடுப்பு விரோதமானது. இந்த தேர்தல் முறைமையை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் கட்சியில் இருக்கும்போது குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆனால் இன்று ஆளும் கட்சிக்கு சென்றதும் அந்த யோசணை மாறியுள்ளது. நான் அதனை நினைத்து ஆச்சர்யப்படவில்லை. ஏனென்றால் நீங்கள் அனைவரும் எதிர் கட்சியிலிருந்து சொல்வதெல்லாம் ஆளும் கட்சிக்கு சென்றவுடன் அதனை மாற்றியுள்ளீர்கள். அதனால் அதனை நினைத்து நான் ஆச்சர்யப்படமாட்டேன். அன்று கூறியதை இன்று கூறமாட்டீர்கள். இந்த பக்கமிருக்கும்போது கூறுவதை அந்த பக்கம் சென்று செய்ய மாட்டீர்கள். அதனால் நாம் அதை பற்றி ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. என்று கூறியுள்ளார்.