இஸ்ரேல் தாக்கியதில் காஸாவில் 140 பேர் பலி!

0
3

ஈரானுடன் மோதலில் ஈடுபட்டிருக்கும் அதே வேளையில் காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல் தொடர்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல்களில் குறைந்தது 140 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

வீடுகள் மீதும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவற்றில் 21 பேர் கொல்லப்பட்டனர். கான் யூனிஸில் உள்ள ஒரு முகாமில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

மத்திய காஸாவில் உள்ள சலாஹுதீன் சாலையில் ஐக்கிய நாடுகள் சபையின் உதவி லொறிகளுக்காக காத்திருந்த பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் பதினான்கு பேர் கொல்லப்பட்டனர்.

உணவுக்காகக் காத்திருந்தவர்களின் இறப்புகள் குறித்து விசாரித்து வருவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

மே மாத இறுதியில் உதவி விநியோகங்கள் மீண்டும் தொடங்கியதிலிருந்து, உணவு உதவி பெற முயன்ற 397 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 3,000க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் காஸா சுகாதார அமைச்சரகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here